வெங்காயம் – 2 பெரியது அல்லது 3 சிரியது(நீளவாக்கில் நறுக்கியது)
தக்காளி – 2(பொடியாக நறுக்கியது)
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்(பொடியாக நறுக்கியது)
புதினா இலைகள் - 1/4கப்(பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5(பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
வெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
தயிர் – 1/4 கப்
தேங்காய் பால் தண்ணீர் கலந்தது - 4.5 கப்(1 கப் தேங்காய் பாலுடன் 3.5 கப் தண்ணீர் கலக்கவும்)
உப்பு – ருசிக்கேற்ப
வர மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி(அல்லது தேவைக்கேற்ப)
சோம்புத்தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
ஊற வைக்க தேவையான பொருட்கள்
உப்பு - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை/ தயிர் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் – ½ தேக்கரண்டி
வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கரம் மசாலா
பிரியாணி இலை - 2
இலவங்கம் - 4
அன்னாசி பூ - 2
பட்டை - 5
ஏலக்காய் - 3
Instructions
தயாரிப்பு முறை
சிக்கனை கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். கலந்து வைக்க கொடுத்துள்ள பொருட்களுடன் சிக்கனை சேர்த்து கலந்து குளிர்சாதனப்பெட்டியில் 1/2 மணி நேரம் வைக்கவும்.
அரிசியை கழுவி 15 நிமிடங்கள் ஊற வைத்து தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
விருப்பப்பட்டால் அரிசியை நெய் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இது பிரியாணிக்கு நல்ல ருசியை கொடுக்கும். மற்றும் அரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும். நேரமில்லையெனில் இதை தவிர்த்துக்கொள்ளலாம்.
செய்முறை
அடி கனமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெயும், நெய்யும் சேர்த்து சூடாக்கவும். சூடானவுடன் கரம் மசாலா அனைத்தையும் சேர்க்கவும். கரம் மசாலா அனைத்தையும் அரைத்தும் சேர்க்கலாம்.
வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும் இஞ்சி-பூண்டு விழுது, மல்லி இலை, புதினா இலைகள் சேர்க்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
அடுத்து கலந்துவைத்த சிக்கனை சேர்த்து மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், சோம்பு தூள், தயிர் மற்றும் உப்பு சேர்க்கவும். 5-10 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். தண்ணீர் குறைந்து சற்று கெட்டியாகும் வரை கிளறவும். (குறிப்பு; ஆட்டு இறைச்சியில் பிரியாணி செய்வதாக இருந்தால் கறி நன்றாக வெந்த பின்னரே அரிசியை சேர்க்க வேண்டும். கீழே குறிப்பிட்டுள்ள முறையில் உங்களுக்கு விருப்பமான முறையை தேர்வு செய்து கொள்ளவும்.)
குக்கரில் செய்யும் முறை
தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசியை சேர்த்து உப்பின் அளவு சரி பார்த்து கொதிக்கவிடவும்.
குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பை குறைத்து 20-30 நிமிடங்கள் வைக்கவும். விசில் சத்தம் வராத அளவில் அடுப்பை குறைத்து வைக்கவும். 20-30 நிமிடங்களில் பிரியாணி தயாராகிவிடும். அடுப்பை குறைத்து வைக்காவிடில் அடிபிடித்துவிடும்.
ரைஸ் குக்கரில் செய்யும் முறை
சிக்கன் சேர்த்த மசாலா கலவையுடன் அரிசி ம்றறும் தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கலந்து ரைஸ் குக்கரில் வைக்கவும்.
உப்பு அளவு சரி பார்த்து ரைஸ் குக்கரில் சமைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் செய்யும் முறை
தண்ணீர் கலந்த தேங்காய் பாலுடன் சிக்கன் மசாலா கலவையை கொதிக்கவிடவும். ஊற வைத்த அரிசி சேர்த்து உப்பு அளவு பார்த்து கொதிக்கவிடவும்.
பாத்திரத்தை நன்றாக மூடிவிடவும். அடுப்பை குறைத்து 30 நிமிடங்கள் வேகவிடவும்.(அலுமினியம் ஃபாயிலைக் கொண்டு பாத்திரத்தை மூடி பின்னர் தட்டால் மூடினால் ஆவி வெளியேறாமல் தடுக்கலாம்.
கன்வென்ஷனல் ஓவனில் செய்யும்முறை
ஓவனில் வைக்கும் பாத்திரத்தில் சிக்கன் மசாலா கலவையுடன் ஊற வைத்த அரிசி தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து வைக்கவும்.
உப்பு அளவு சரி பார்த்து அலுமினியம் ஃபாயில் கொண்டு பாத்திரத்தை மூடி 45 நிமிடங்கள் 350 டிகிரியில் ஓவனில் வைக்கவும்.
மைக்ரோவேவ் ஓவனில் செய்யும்முறை
ஓவனில் வைக்கும் பாத்திரத்தில் சிக்கன் மசாலா கலவையுடன் ஊற வைத்த அரிசி தண்ணீர் கலந்த தேங்காய் பாலை சேர்த்து ஓவனில் வைக்கவும்.
உப்பு அளவு சரி பார்த்து மூடி வைத்து மைக்ரோ ஹையில் 20 நிமிட்ங்கள் வைக்கவும்.
இறுதியில் எந்த முறையில் செய்தாலும் மிகவும் ருசியான பிரியாணி தயார். கொத்தமல்லி இலைகள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சை கொண்டு அலங்கரிக்கவும்.