பச்சை மிளகாய் – 3(நறுக்கியது அல்லது இட்லி பொடி – 2 மேசைக்கரண்டி)
கொத்தமல்லி தழை – கொத்து(பொடியாக நறுக்கியது)
எண்ணெய் / நெய் – தேவையான அளவு(ஊத்தப்பம் தயாரிக்க)
Instructions
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பெரிய வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் எது வேண்டுமானாலும் உங்கள் விருப்பம். பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வெங்காயத்துடன் கலந்து கொள்ளவும். குழந்தைகளுக்கு கொடுப்பதால் நான் இதை தவிர்த்து ஊத்தப்பம் தயாரிக்கும் போது இட்லி பொடி தூவி கொள்வேன்.
தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் தடவவும். நீங்கள் நான்ஸ்டிக் கல்லை பயன்ப்டுத்தி எண்ணெய் குறைவாக உபயோகிக்கலாம். ஆனால் மொறுமொறுப்பான சுவையான ஊத்தப்பம் தயாரிக்க இரும்பு கல்லை பயன்படுத்துவது நல்லது.
ஒரு கரண்டி மாவை கல்லின் நடுவில் ஊற்றி வட்டமாக தேய்த்துவிடவும். கல் முழுவதும் மெல்லியதாக தேய்க்காமல் சிறிய வட்டமாக தேய்த்தால் போதும்.
ஊத்தப்பம் மேல் இட்லி பொடி தூவி நறுக்கிய வெங்காயம் தூவவும். நீங்கள் விரும்பினால் நறுக்கிய கொத்தமல்லி தழை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துகொள்ளலாம்.
ஊத்தப்பத்தை சுற்றி எண்ணெய் ஊற்றவும். நடுவிலும் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். அடுப்பை குறைத்து வைத்து நன்றாக வேகவிடவும். நான் 1/4 கிண்ணம் நல்லெண்ணெயுடன் 2 மேசைக்கரண்டி நெய் சேர்த்து கலந்து ஊத்தப்பம் தயாரிக்க பயன்படுத்துவேன்.
அடிபாகம் பொன்னிறமாக 2 நிமிடங்கள் ஆகும். பின்னர் திருப்பி போட்டு வேகவிடவும். தோசை கரண்டியால் லேசாக அழுத்திவிட்டால் மேலே தூவியவை நன்றாக வேகும்.
அடுத்து 1 நிமிடத்தில் அடுத்த பக்கமும் வெந்து வெங்காயம் மொறுமொறுப்பாகிவிடும். ஊத்தப்பம் மொறுமொறுப்பாகவும் நடுவில் மெத்தென்றும் இருக்கும்.
கல்லில் இருந்து மெதுவாக எடுத்து சூடாக பரிமாறவும். கல்லில் இருந்து எடுத்து உடனே சூடாக பரிமாறினால் தான் அதன் முழு சுவையும் கிடைக்கும்.