வர மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி(உங்கள் தேவைக்கேற்ப)
வெள்ளை எள் – 1 தேக்கரண்டி(பாதியளவு வறுத்தது)
பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
அரிசி மாவு, பொட்டுகடலை எடுத்துகொள்ளவும். நீங்கள் வீட்டில் அரிசி மாவு வைத்திருந்தால் எடுத்துகொள்ளவும். இல்லாவிட்டால் கடைகளில் கிடைக்கும் மாவை பயன்படுத்தலாம். பொட்டுகடலை மாவு தயாரிக்க மிக்ஸியில் நைஸாக அரைத்து சலித்துகொள்ளவும். இப்போது பக்கோடா செய்ய மாவு தயார்.
அரிசி மாவு, பொட்டுகடலை மாவை நன்றாக சலித்துகொள்ளவும். பொரிக்கும்போது வெடிக்காமல் இருக்கும். எள்ளை பாதியளவு வறுப்பதும் வெடிக்காமல் இருப்பதற்குதான். அந்த மோசமான அனுபவம் எனக்கு இருப்பதால் இவ்வாறு செய்வது நல்லது என்பதை குறிப்பிடுகிறேன்.
ஓரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு நன்றாக கலந்துகொள்ளவும்.
தண்ணீர் சேர்த்து மாவு கையில் ஒட்டாமல் வரும் அளவு பிசைந்துகொள்ளவும்.
அதேசமயம் அடி அகலமான வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சூடாக்கவும்.
ஒரு கையளவு மாவை எடுத்து முறுக்கு அச்சில் அடைக்கவும். இரண்டு கோடுகள் உள்ள தட்டை அச்சில் போடவும். (படத்தில் உள்ளது).
இந்த அச்சை கொண்டு தான் ரிப்பன் பக்கோடா பிழிய வேண்டும்.
எண்ணெயில் பெரிய வட்டமாக பிழியவும். ஓரு முறையில் ஓன்றை மட்டும் பிழியவும். அதிகமாக இருந்தால் வேகாது.
பொன்னிறமாகும் வரை திருப்பிவிட்டு, இரண்டு பக்கமும் வேகும்வரை பொரிக்கவும்.
வெந்தபின்னர் வெளியில் எடுத்து அதிகப்படியான எண்ணெயை வடியவிடவும்.
ஆறிய பின்னர் காற்றுபுகாத பாத்திரத்தில் வைக்கவும். 2- 3 வாரங்கள் வைத்து உபயோகிக்கலாம்.