பச்சை மிளகாய் – 2 அல்லது வர மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி
உப்பு – சுவைகேற்ப
எண்ணெய் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - அலங்கரிக்க
அரைக்க தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் – 3 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
Instructions
சுரைக்காயை கழுவி தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணெய் சூடாக்கி சீரகம் வெடிக்கவிடவும்.
நறுக்கிய வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வத்க்கவும்.
சுரைக்காய், உப்பு, மஞ்சள் தூள், வர மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்க்கவும்.
1 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மூடிவைத்து சுரைக்காயை நன்றாக வேகவிடவும் (7- 10 நிமிடங்கள்)
இந்த நேரத்தில் துருவிய தேங்காய், கசகசாவை சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துகொள்ளவும். இதனுடன் 4-5 முந்திரி சேர்த்து அரைத்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
அடுப்பை குறைத்து அரைத்த விழுதை சேர்க்கவும்.
2-3 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தழை கொண்டு அலங்கரிக்கவும்