முந்திரி பருப்பு - 1.5 கிண்ணம்(வறுத்தது- கடலை மசாலா செய்ய நிலகடலை -1.5 கிண்ணம்)
கடலை மாவு – 1/ 2கிண்ணம்
அரிசி மாவு – 4 மேசைக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
வர மிளகாய் – 5
மிளகு தூள் – 1/ 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/ 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து(தேவைபட்டால்)
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கிண்ணம்(தேவையான அளவு)
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
Instructions
நீங்கள் கடைகளில் கிடைக்கும் வறுத்த முந்திரியை பயன்படுத்தலாம். அல்லது வீட்டிலும் வறுத்துகொள்ளலாம்.
பூண்டு பற்கள், வர மிளகாய் இரண்டையும் தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ஊறவைத்த தண்ணீர் சேர்த்து பூண்டு, வர மிளகாயை அரைத்துகொள்ளவும்.
அரைத்தவிழுது, கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகு தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து கலந்துகொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
இறுதியாக முந்திரி சேர்த்து கலக்கவும். மசாலா முந்திரி ஒட்டி இருக்குமாறு மேல் முழுவதும் இருக்குமாறு கலந்து கொள்ளவும்.
அதே நேரத்தில் ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெய் சூடாக்கவும்.
கையில் கலந்துள்ள முந்திரி மசாலாவை எடுத்து முந்திரி தனித்தனியாக விழும்படி எண்ணெயில் போடவும்.
பொன்னிறமாகும் வரை வறுக்கவும். எண்ணெயில் இருந்து எடுத்து வடியவிட்டு பேப்பர் டவலில் போடவும்.
நீங்கள் இதை அதிக அளவிலும் செய்து காற்றுபுகாத பாத்திரத்தில் வைத்து ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம். மாலை நேரத்தில் டீயுடன் அல்லது மழை நேரத்தில் அல்லது ஏதேனும் சினிமா பார்க்கும் நேரம் என எப்போது வேண்டுமானாலும் சுவைத்து மகிழலாம்.